என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
MFஅள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....
தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
Fகாலங்கள் போற்றும்
கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை
இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
MFவாடிய பூமியில் கார்முகிலாய் மழை
தூவிடும் மானிடன் என் மகனே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....
அன்புடன் அரவிந்த் நன்றி