menu-iconlogo
logo

Chinnavalai Mugam

logo
Lyrics
ஆண்: சின்னவளை

முகம் சிவந்தவளை

நான் சேர்த்துக் கொள்வேன்

கரம் தொட்டு

சின்னவளை

முகம் சிவந்தவளை

நான் சேர்த்துக் கொள்வேன்

கரம் தொட்டு

என்னவளை காதல் சொன்னவளை

நான் ஏற்றுக் கொள்வேன்

வளையிட்டு

( இசை )

பெண்: வந்தவளை

கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொள்வாய்

வளையிட்டு

வந்தவளை கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொள்வாய்

வளையிட்டு

பூங்குவளை கண்கள் கொண்டவளை

புது பூப் போல் பூப் போல் தொட்டு

ஆண்: தூயவளை

நெஞ்சை தொடர்ந்தவளை

மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்

தூயவளை

நெஞ்சை தொடர்ந்தவளை

மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்

பால் மழலை மொழி படித்தவளை

சுகம் பட்டால் பட்டால் படியும்

பெண்: கன்னம் மாதுளை

கனிந்த சேயிழை

கரைத்தால் கரையாதோ

கன்னம் மாதுளை

கனிந்த சேயிழை

கரைத்தால் கரையாதோ

இரு கண்ணால் சொன்னால்

பக்கம் வந்தால் தந்தால்

நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வந்தவளை கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொள்வாய்

வளையிட்டு

ஆண்: என்னவளை காதல் சொன்னவளை

நான் ஏற்றுக் கொள்வேன்

வளையிட்டு

பெண்: வான மழை போல் ஆனவளை

சுவை எங்கே எங்கே மறக்கும்

வான மழை போல் ஆனவளை

சுவை எங்கே எங்கே மறக்கும்

நீ அவளை விட்டுப் போகும் வரை

அது இங்கே இங்கே இருக்கும்

ஆண்: மின்னும் கை வளை

மிதக்கும் பெண்களை

அசைத்தால் அசையாதோ

மின்னும் கை வளை

மிதக்கும் பெண்களை

அசைத்தால் அசையாதோ

அது இன்னும் கொஞ்சம் என்று

பெண்மை கெஞ்சும் வரை

சுவைத்தால் சுவைக்காதோ

பெண்: வந்தவளை

கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு

பூங்குவளை கண்கள் கொண்டவளை

புது பூப் போல் பூப் போல் தொட்டு

ஆண்: சின்னவளை

முகம் சிவந்தவளை

நான் சேர்த்துக் கொண்டேன்

கரம் தொட்டு

என்னவளை காதல் சொன்னவளை

நான் ஏற்றுக் கொண்டேன்

வளையிட்டு

Chinnavalai Mugam by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers