menu-iconlogo
logo

Thottal Poomalarum (Half 1 & 2)

logo
Lyrics
தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல்

காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்

ஆசை விடுவதில்லை ஹோய்

ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

இளமை முடிவதில்லை ஹோ ஓ..

இளமை முடிவதில்லை

எடுத்துக் கொண்டாலும்

கொடுத்துச் சென்றாலும்

பொழுதும் விடிவதில்லை ஹோய்

பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்

பாவை முகமல்லவா ஹோ ஓ..

பாவை முகமல்லவா

அழகிய தோள்கள் பழகிய நாட்கள்

ஆயிரம் சுகமல்லவா ஹோய்

ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

ஆஹா ஆஆ ...

ஆஹா ஹா ஹாஹாஹா ...

ஓஹோ ஓ.. ....

ஓஹோ ஹோ ஹோஹோ ....

Thottal Poomalarum (Half 1 & 2) by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers