menu-iconlogo
logo

Mayakkam Enna

logo
Lyrics
ஆ : மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன

இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான் கண்ணே

பெ : கற்பனையில் வரும் கதைகளிலே

நான் கேட்டதுண்டு கண்ணா –

என் காதலுக்கே

வரும் காணிக்கை என்றே

நினைத்ததில்லை கண்ணா

ஆ : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்

அதில் தேவதை போலே நீ ஆட

பெ : பூவாடை வரும் மேனியிலே

உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆ : கார்காலம் என விரிந்த கூந்தல்

கன்னத்தின் மீதே கோலமிட

கார்காலம் என விரிந்த கூந்தல்

கன்னத்தின் மீதே கோலமிட

பெ : கை வளையும் மை விழியும்

கட்டியணைத்து கவி பாட

ஆ : மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

ஆ : அன்னத்தைத் தொட்ட கைகளினால்

மதுக் கிண்ணத்தை இனி நான்

தொட மாட்டேன்

பெ : கன்னத்தில் இருக்கும்

கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல் விட மாட்டேன்

ஆ : உன்னையல்லால் ஒரு

பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொட மாட்டேன் –

உன்னையல்லால் ஒரு

பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொட மாட்டேன

பெ : உன் உள்ளம் இருப்பது

என்னிடமே அதை

உயிர் போனாலும் தர மாட்டேன்

ஆ : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான் கண்ணே

அன்புக் காணிக்கை தான் கண்ணே

Mayakkam Enna by T.M. Soundararajan - Lyrics & Covers