menu-iconlogo
logo

Muthukkalo Kangal

logo
Lyrics
முத்துக்களோ

கண்கள்

தித்திப்பதோ

கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

முத்துக்களோ

கண்கள்

தித்திப்பதோ

கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன

உன் கண்கள்

பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊறிய

ஜாதிப் பூவை

சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே

பெண்கள்

தித்திப்பதே

கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை

மெல்ல மெல்ல

தென்றல் தாலாட்ட

கடலில் அலைகள்

ஓடி வந்து

காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன

என் எண்ணம்

ஏங்கும் ஏக்கமென்ன

விருந்து கேட்பதென்ன

அதையும்

விரைந்து கேட்பதென்ன

முத்துக்களோ

கண்கள்

தித்திப்பதோ

கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

ஆசை கொஞ்சம்

நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன

அருகில் நடந்து

மடியில் விழுந்து

ஆடக் கேட்பதென்ன

மலர்ந்த காதல் என்ன

உன் கைகள்

மாலையாவதென்ன

வாழை தோரண

மேளத்தோடு

பூஜை செய்வதென்ன

முத்துக்களே

பெண்கள்

தித்திப்பதே

கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

Muthukkalo Kangal by T.M. Soundararajan - Lyrics & Covers