M: வா வா என் வீணையே... F: ன ன நா
M: விரலோடு கோபமா... F: ன ன நா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமா...
கிள்ளாத முல்லையே... காற்றோடு கோபமா...
இளந்தென்றல் தேடும் போது
ஊடலாகுமா...ஆ...ஆ...
வா வா என் வீணையே... F: ன ன நா
விரலோடு கோபமா... F: ன ன ன ன நா
F: தண்டோடு தாமரை ஆட...
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உந்தன் ஞாபகம் கூட...
தண்டோடு தாமரை ஆட...
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உந்தன் ஞாபகம் கூட...
M: துணை தேடுதோ தனிமை...
துயர் கூடுதோ...
F: அணை மீறுதோ உணர்ச்சி...
அலை பாயுதோ...
M: நாள்தோறும் ராத்திரி
வேளையில் ரகசிய பாஷை பாட...
F வா வா உன் வீணை நான்... M: ன ன நா
விரல் மீட்டும் வேளைதான்... M: ன ன நா
மீட்டாமல் காதல் ராகம் யாவும்
விளைந்திடுமோ...ஓ...ஓ...
கிள்ளாத முல்லையே...
வந்தாள் உன் எல்லையே...
இளந்தென்றல் தேடும் போது
ஊடலாகுமோ...ஓ...ஓ...
M: சந்தோஷ மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகம் ஆக...
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட...
சந்தோஷ மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகம் ஆக...
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட...
F: இரவாகலாம்... இளமை அரங்கேரலாம்...
M: உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்...
F: கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்...
M: வா வா என் வீணையே... F: ல ல லா...
M: விரலோடு கோபமா... F: ல ல லா...
F: மீட்டாமல் காதல் ராகம் யாவும்
விளைந்திடுமோ...ஓ...ஓ...ஓ...
M: கிள்ளாத முல்லையே... காற்றோடு கோபமா...
F: இளம் தென்றல் தேடும் போது
ஊடலாகுமோ...ஓ...ஓ...ஓ...
M: வா வா என் வீணையே... F: ல ல லா...
M: விரலோடு கோபமா... F: ல ல லா...
F: வா வா உன் வீணை நான்... M: ல ல லா...
F: விரல் மீட்டும் வேளைதான்...
M: ல ல லா... ல ல ல ல லா