
Manithan Enbavan
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போல
தன்னை தந்து
தியாகி ஆகலாம்
உருகி ஓடும்
மெழுகு போல
ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்...
தெய்வம் ஆகலாம்
ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம்
சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று
விரிந்த உள்ளம்
மலர்கள் ஆகலாம்...
ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம்
சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று
விரிந்த உள்ளம்
மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று
அழுதபோதும்
தலைவன் ஆகலாம்
மனம்
மனம்
அது கோவில்
ஆகலாம்...
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
மனமிருந்தால்
பறவைக் கூட்டில்
மான்கள் வாழலாம்
வழி இருந்தால்
கடுகுக்குள்ளே
மலையை காணலாம்...
மனமிருந்தால்
பறவைக் கூட்டில்
மான்கள் வாழலாம்
வழி இருந்தால்
கடுகுக்குள்ளே
மலையை காணலாம்
துணிந்துவிட்டால்
தலையில் எந்த
சுமையும் தாங்கலாம்
குணம்
குணம்
அது கோவில்
ஆகலாம்...
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போல
தன்னை தந்து
தியாகி ஆகலாம்
உருகி ஓடும்
மெழுகு போல
ஒளியை வீசலாம்...
மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்...
தெய்வம் ஆகலாம்
ஆஹா...
ஓஹோ...