வணக்கம்
படம் : அலிபாபாவும் 40
திருடர்களும் (1956)
இசை: S. தக்ஷணாமூர்த்தி
பாடியவர்: AM. ராஜா, P.பானுமதி
பாடல்வரிகள்: மருதகாசி
M: மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
F: பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
M: கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
M: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
F: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
M: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
F: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
மாசிலா உண்மை காதலே
மாறுமா செல்வம் வந்த போதிலே
M: கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
M: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
F: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
M: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
F: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
Both: அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ...