ஆ: மல்லிகை பூ வாசம் என்னை
கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை முள்ளை போல
குத்துகின்றது..
பெ: நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்
சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள்
கொட்டுகின்றது..
ஆ: கண்ணே உன் முந்தானை
காதல் வலையா
உன் பார்வை குற்றால
சாரல் மழையா
பெ: அன்பே உன் ராஜாங்கம்
எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை
எந்தன் இடையா
ஆ: இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடு தான் ..
ஆ: ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..
ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..
பெ: சொல்லாமலே யார் பார்த்தது..
பெ: கண்ணுக்குள்ளே உந்தன் முகம்
ஒட்டி கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து
சுற்றிகொண்டது
ஆ: என்னை விட்டு தென்றல் கொஞ்சம்
தள்ளி சென்றது
நான் உந்தன் பேரைச் சொன்னபோது
அள்ளி கொண்டது
பெ: அன்பே நான் எந்நாளும்
உன்னை நினைத்து
முள் மீது பூவானேன்
தேகம் இளைத்து
ஆ: வில்லோடு அம்பாக
என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ
யுத்தம் நடத்து
பெ: உலக அதிசயத்தில்
ஒன்றுகூடியது நம் காதலா
ஆ: ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..
ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..
பெ: சொல்லாமலே யார் பார்த்தது..
நெஞ்சோடு தான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ..
சொல்லாமலே யார் பார்த்தது..