இசை : ஏ எம் ராஜா
பாடியவர்கள் : ஏ எம் ராஜா பி சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....
பெண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது...
பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா...
ஆண்: மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா...
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா...
பெண்: தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்
காதல் மாறுமா..
இருவர்: மனதினிலே பிரிவுமில்லை
மாற்றுவாரில்லை...
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
காணம் பாடுவோம்...
இருவர்: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது..
ஆண் : முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா...
பெண் : இன்று பார்த்து பார்த்து
முடித்துக்கொண்டால்
நாளை வேண்டுமே..
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா...
ஆண் : கணை தொடுத்து தொடுத்து
மிரட்டும் கண்ணால்
பார்க்கலாகுமா..
இருவர் : மலர்முடிப்போம் மணம் பெறுவோம்
மாலை சூடுவோம்...
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
காணம் பாடுவோம்...
இருவர்: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது..