ஆ : தனிமையிலேஏஏஏ
தனிமையிலேஏஏ..
தனிமையிலே இனிமை
காண முடியுமா
பெ: நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமாஆ
தனிமையிலே இனிமை
காண முடியுமாஆஆ
ஆ : துணை இல்லாத
வாழ்வினிலே சுகம் வருமாஆஆ
பெ :அதை சொல்லி சொல்லி
திரிவதனால் சுகம் வருமாஆஆ
ஆ : துணை இல்லாத
வாழ்வினிலே சுகம் வருமாஆஆ
பெ : அதை சொல்லி சொல்லி
திரிவதனால் சுகம் வருமா
மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமாஆஆ
மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமாஆஆ
வெறும் மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமாஆஆ
ஆ : தனிமையிலேஏஏ
தனிமையிலே
இனிமை காண முடியுமா
பெ: நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமாஆஆ
தனிமையிலே
இனிமை காண முடியுமாஆஆ
பெ : மலரிருந்தால் மணமிருக்கும்
தனிமை இல்லை
செங்கனியிருந்தால் சுவையிருக்கும்
தனிமை இல்லை
மலரிருந்தால் மணமிருக்கும்
தனிமை இல்லை
செங்கனியிருந்தால் சுவையிருக்கும்
தனிமை இல்லை
ஆ : கடல் இருந்தால் அலை
இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை
இருக்கும் தனிமை இல்லை
நாம் காணும் உலகில் ஏதும்
தனிமை இல்லை
தனிமையிலேஏஏ
தனிமையிலே
இனிமை காண முடியுமாஆஆ
பெ: நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமாஆஆ
தனிமையிலே இனிமை
காண முடியுமாஆஆ
பெ: பனி மலையில்
தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே
பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை
மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும்
பாவலனும்
இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்
ஆ: தனிமையிலேஏஏ
தனிமையிலே
இனிமை காண முடியுமாஆஆ
பெ: நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமாஆஆ
இருவரும்: தனிமையிலே
இனிமை காண முடியுமாஆஆ