menu-iconlogo
logo

Kodiyile Malloigai Poo

logo
Paroles
ஆண் : கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண் : கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா

தவிக்கிறேன் நானே

பெண் : மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு

நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு

வண்டி எங்கே சேரும்

பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இன்ப துன்பம் யாரால

ஆண் : பறக்கும் திசையேது

இந்த பறவை அறியாது

உறவோ தெரியாது

அது உனக்கும் புரியாது

பெண் : பாறையிலே பூமொளைச்சு

பார்த்தவக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு

ஆயிசு நூறு

ஆண் : காலம் வரும் வேளையிலே

காத்திருப்பேன் பொன்மயிலே

பெண் : தேதி வரும் உண்மையிலே

சேதி சொல்வேன் கண்ணாலே

பெண் : கொடியிலே மல்லிகைப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா

தவிக்கிறேன் நானே

பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

Kodiyile Malloigai Poo par Jayachandran/S. Janaki - Paroles et Couvertures