படம்: சதி லீலாவதி
பாடல்: மகராஜனோடு ராணி
பாடகர்: பி.உன்னிகிருஷ்னன்,
கே.எஸ். சித்ரா
ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
ஆ: இது மன்மத சாம்ராஜ்யம்.
புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: கங்கைக்கொரு வங்கக்கடல்
போல் வந்தான். அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா
அவன் தந்தான். அவன் தந்தான்
ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள்.
சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச்
சின்ன மின்னல்கள்.
ஓர் காதல் பூத்ததோ
பெ: பக்கத் துணை வாய்க்காமல்
பெண் வாடினாளோ
ஆ: பக்கம் வந்து கை சேர
பண் பாடினாளோ
பெ: ஒரு ராகம். ஒரு தாளம்.
இணைகூடும்போது கானம்தான்
பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்.
புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த
ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள்
பூம்பாவை, பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்
பேராசை, பேராசை
பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்.
நீ கேட்க வேண்டுமோ
ஆ: இலக்கணம் பார்க்காது
ஓர் பாடல் கூற
பெ: இடைவெளி தோன்றாது
ஓர் ஜோடி சேர
ஆ: என்ன வேகம், என்ன தாகம்.
ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும்.
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: இது மன்மத சாம்ராஜ்யம்.
புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது,
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்.
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
நண்றி