menu-iconlogo
logo

Nila Kaayum Neram

logo
Paroles
ஆ: நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்

பெ: நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்

ஆ: பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்.

அன்பே நீயே அழகின் அமுதே

அன்பே நீயே அழகின் அமுதே..

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்....

ஆ: தென்றல் தேரில் நான் தான்

போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி

பாடும் நல்ல வாழ்த்து

பெ: கண்கள் மூடி நான் தூங்க

திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே

கங்கை வந்து நீராட்டும்

ஆ: நினைத்தால் இதுப் போல் ஆகாததேது

பெ: அணைத்தால் உனைத்தான்

நீங்காது பூ மாது

ஆ: நெடு நாள் திருத்தோள்

எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே

அன்பே நீயே அழகின் அமுதே..

நிலா காயும் நேரம் சரணம்

ஆ:உலா போக நீயும் வரணும்....

பெ: மின்னல் நெய்த சேலை

மேனி மீது ஆட

மிச்சம் மீதி காணாமல்

மன்னன் நெஞ்சம் வாட

ஆ; அர்த்த ஜாமம் நான் சூடும்

ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட

ஆசை தந்த நோய் போகும்

பெ: நடக்கும் தினமும்

ஆனந்த யாகம்

ஆ: சிலிர்க்கும் அடடா

ஸ்ரீதேவி பூந்தேகம்

பெ: அணைத்தும் வழங்கும்

காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே

அன்பே நீயே அழகின் அமுதே....

ஆ :நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்....

பெ : பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்.

ஆ :அன்பே நீயே அழகின் அமுதே

அன்பே நீயே அழகின் அமுதே....

பெ :நிலா காயும் நேரம் சரணம்

ஆ:உலா போக நீயும் வரணும்....

நன்றி இணைந்து பாடியதுக்கு

Nila Kaayum Neram par Mano/S. Janaki - Paroles et Couvertures