menu-iconlogo
logo

Ithazhil Kathai Ezhuthum

logo
Paroles
ஆண் : காதல் கிளிகள் ரெண்டு

ஜாடை பேசக்கண்டு

ஏதேதோ எண்ணம்

என் நெஞ்சில் உதிக்கும்

பெண் : நானும் நீயும் சேர்ந்து

ராகம் பாடும்போது

நீரோடை போல

என் நெஞ்சம் இனிக்கும்

ஆண் : இனிய பருவமுள்ள

இளங்குயிலே

இனிய பருவமுள்ள

இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம்

என்னுடன் எழுத

பெண் : நானும் எழுதிட

இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து

இடையினில் தடுக்குது

ஆண் : ஏங்கித் தவிக்கையில்

நாணங்கள் எதற்கடி

ஏக்கம் தனிந்திட

ஒரு முறை தழுவடி

பெண் : காலம் வரும் வரை

பொறுத்திருந்தால்

கன்னி இவள்

மலர்க்கரம் தழுவிடுமே

ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ

காளை மனம்

அதுவரை பொறுத்திடுமோ

பெண் : மாலை மலா் மாலை இடும்

வேளை தனில் தேகம் இது

விருந்துகள் படைத்திடும்

ஆண் : இதழில் கதை எழுதும்

நேரமிது,

இன்பங்கள் அழைக்குது

ஆஆஆஆ….

பெண் : மனதில் சுகம் மலரும்

மாலையிது..

ஆண் : தோகை போலே மின்னும்

பூவை உந்தன் கூந்தல்

கார்மேகம் என்றே

நான் சொல்வேன் கண்ணே

பெண் : பாவை எந்தன் கூந்தல்

வாசம் யாவும் அந்த

மேகம் தனில் ஏது

நீ சொல்வாய் கண்ணா

ஆண் : அழகைச் சுமந்து வரும்

அழகரசி

அழகைச் சுமந்து வரும்

அழகரசி

ஆனந்த பூமுகம்

அந்தியில் வந்திடும்

சுந்தர நிலவோ

பெண் : நாளும் நிலவது

தேயுது மறையுது

நங்கை முகமென

யாரதைச் சொன்னது

ஆண் : மங்கை உன் பதில்

மனதினைக் கவருது

மாரன் கணை வந்து

மார்பினில் பாயுது

பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே

காதல் மயில்

துணை என வருகிறது

ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே

மோகம் எனும் நெருப்பினைப்

பொழிகிறது

பெண் : மோகம் நெருப்பாக

அதை தீர்க்குமொரு ஜீவ நதி

அருகினில் இருக்குது

பெண் : மனதில் சுகம் மலரும்

மாலையிது

மான் விழி மயங்குது

ஆஆஆஆ…

ஆண் : இதழில்

கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது

ஆஆஆ….

இதழில் கதை எழுதும்

நேரமிது..