ஆண் : காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
பெண் : நானும் நீயும் சேர்ந்து
ராகம் பாடும்போது
நீரோடை போல
என் நெஞ்சம் இனிக்கும்
ஆண் : இனிய பருவமுள்ள
இளங்குயிலே
இனிய பருவமுள்ள
இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம்
என்னுடன் எழுத
பெண் : நானும் எழுதிட
இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து
இடையினில் தடுக்குது
ஆண் : ஏங்கித் தவிக்கையில்
நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட
ஒரு முறை தழுவடி
பெண் : காலம் வரும் வரை
பொறுத்திருந்தால்
கன்னி இவள்
மலர்க்கரம் தழுவிடுமே
ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம்
அதுவரை பொறுத்திடுமோ
பெண் : மாலை மலா் மாலை இடும்
வேளை தனில் தேகம் இது
விருந்துகள் படைத்திடும்
ஆண் : இதழில் கதை எழுதும்
நேரமிது,
இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….
பெண் : மனதில் சுகம் மலரும்
மாலையிது..
ஆண் : தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே
நான் சொல்வேன் கண்ணே
பெண் : பாவை எந்தன் கூந்தல்
வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது
நீ சொல்வாய் கண்ணா
ஆண் : அழகைச் சுமந்து வரும்
அழகரசி
அழகைச் சுமந்து வரும்
அழகரசி
ஆனந்த பூமுகம்
அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
பெண் : நாளும் நிலவது
தேயுது மறையுது
நங்கை முகமென
யாரதைச் சொன்னது
ஆண் : மங்கை உன் பதில்
மனதினைக் கவருது
மாரன் கணை வந்து
மார்பினில் பாயுது
பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில்
துணை என வருகிறது
ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப்
பொழிகிறது
பெண் : மோகம் நெருப்பாக
அதை தீர்க்குமொரு ஜீவ நதி
அருகினில் இருக்குது
பெண் : மனதில் சுகம் மலரும்
மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ…
ஆண் : இதழில்
கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
ஆஆஆ….
இதழில் கதை எழுதும்
நேரமிது..