ஆண்: மேகமே! தூதாக வா!
அழகின்ஆராதனை
தென்றலே! தாலாட்ட வா!
இளமை முந்தானையை
மேகமே! தூதாக வா!
அழகின் ஆராதனை
பெண்: மஞ்சள் நீர் வண்ணமே!
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே!
கொஞ்சம் துள்ளுங்களேன்
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு
விளையாடும் வரையில்
ஆண்: மேகமே! தூதாக வா!
அழகின் ஆராதனை
ஆண்: சின்ன வாழைத் தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்புத் தேனைச் சிந்தி
என்னைக் காணச் சொல்லி
அந்த தேன்கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக்கொண்டு
இதழாலே இணைய
பெண்: மேகமே! தூதாக வா!
அழகின் ஆராதனை
ஆண்: கொஞ்சும் மாணிக்கங்கள்
சிந்தும் மணி முத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
பெண்: அந்த காணிக்கைகள்
உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
ஆண்: இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
பெண்: மேகமே! தூதாக வா!
அழகின் ஆராதனை
ஆண்: தென்றலே! தாலாட்ட வா!
இளமை முந்தானையை
Both: மேகமே! தூதாக வா!
அழகின் ஆராதனை