menu-iconlogo
logo

Agaya Gangai

logo
Paroles
ஆகாய கங்கை கடல் சேருமா

மூடாத கண்கள் கனாக் காணுமா

வானில் நீலமாய் பூவில் வாசமாய்

எந்தன் வாழ்விலே வந்த நேசம் நீயடி

என் வீட்டில் மீண்டும் உன் வாசம் வீசவே

உன் பாதை மீது என் பாதம் பதித்தேன்

நீரின்றி மீனா நீயின்றி நானா

தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

யார் யாரோ என்னோடு

என் மனமோ உன்னோடு

வேறாரும் பார்க்காமல்

வேர்க்கின்றேன் கண்ணோடு

ஓ... அன்பே தனித்தே தவித்தேன்

என் சுவாசக்காற்றில் உன் வாசம் சேர்க்க

எங்கே உனை தேட

நீரின்றி மீனா நீயின்றி நானா

தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

தொலைதூரம் நீ போக

திசை தேடி நான் வாட

கரை சேரக் கேட்கின்றேன்

விண்மீனே வழிகாட்டு

ஏ பெண்ணே அலைந்தேன் தொலைந்தேன்

கரைவந்த போதும் தொடர்வேனே உன்னை

உயிர் கொண்ட தேடலடி ஹே

நீரின்றி மீனா நீயின்றி நானா

தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

ஆகாய கங்கை கடல் சேருமா

மூடாத கண்கள் கனாக் காணுமா

வானில் நீலமாய் பூவில் வாசமாய்

எந்தன் வாழ்விலே வந்த நேசம் நீயடி

என் வீட்டில் மீண்டும் உன் வாசம் வீசவே

உன் பாதை மீது என் பாதம் பதித்தேன்

நீரின்றி மீனா நீயின்றி நானா

தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

Agaya Gangai par Srinivas/Raj Thillaiyampalam - Paroles et Couvertures