ஆண்: முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
பெண்: படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை
சூடத் துடிப்பதென்ன
முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
ஆண்: கன்னிப் பெண்ணை
மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட...
கன்னிப் பெண்ணை
மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட...
பெண்: கடலில் அலைகள்
ஓடி வந்து காலை நீராட்ட
ஆண்: எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன...
பெண்: விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன
ஆண்: முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
பெண்: ஆசை கொஞ்சம்
நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன
ஆசை கொஞ்சம்
நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன
ஆண்: அருகில் நடந்து
மடியில் விழுந்து
ஆடக் கேட்பதென்ன
பெண்: மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலை ஆவதென்ன
ஆண்: வாழை தோரண மேளத்தோடு
பூஜை செய்வதென்ன
பெண்: முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை