வணக்கம்
ஆ : மயக்கமென்ன ,,
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே ,
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன
இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
பெ : கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா –
என் காதலுக்கே வரும்
காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
படம்
வசந்த மாளிகை
பாடல் இயற்றியவர்
கண்ணதாசன்
இசையமைப்பாளர்
எம்.எஸ்.வி
பாடகர்கள்
டி எம் எஸ் பி சுசீலா
நடிகர்கள்
சிவாஜிகணேசன் வாணிஶ்ரீ
தமிழில் தருவது
கீதாஞ்சலி
பதிவேற்றம்
அன்பு விஷ்வா
ஆ : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட ,
பெ : பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆ : கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
பெ : கை வளையும்
மை விழியும்
கட்டியணைத்து கவி பாட
ஆ : மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
ஆ : அன்னத்தைத் தொட்ட
கைகளினால் மதுக்
கிண்ணத்தை இனி நான்
தொட மாட்டேன்
பெ : கன்னத்தில் இருக்கும்
கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
ஆ : உன்னையல்லால் ஒரு
பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும்
தொட மாட்டேன் –
பெ : உன் உள்ளம் இருப்பது
என்னிடமே அதை
உயிர் போனாலும் தர மாட்டேன்
ஆ : மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன
இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
அன்புக் காணிக்கை தான் கண்ணே
️ ️நன்றி மீண்டும் சந்திப்போம் ️ ️