வணக்கம்
படம் : உலகம் சுற்றும் வாலிபன்
கவிதை : கவிஞர் வாலி
நாயகன் : எம்.ஜி. ஆர்
பச்சைக்கிளி
முத்துச்சரம்
முல்லைக்கொடி யா ரோ...
பச்சைக்கிளி
முத்துச்சரம்
முல்லைக்கொடி யா ரோ..
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீ யோ....
பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ...
ஆ...ஆ.....ஆ....
பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோஓஓ
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ...
தத்தை போலத்
தாவும் பாவை
பாதம் நோகும் என்று..
மெத்தைப்போல
பூவை தூவும்
வாடைக் காற்றும் உண்டு..
வண்ண சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு..
இந்த கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு..
கண்ணில் ஆடும் மாங்கனி
கையில் ஆடுமோ..
கண்ணில் ஆடும் மாங்கனி
கையில் ஆடுமோ..
நானே தரும்
நாளும் வரும்
ஏனிந்த அவசரமோ...
பச்சைக்கிளி
முத்துச்சரம்
முல்லை கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ....
இசை பாடும் உங்களை
எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
உங்களுக்கும் பிடித்து இருந்தால்
பாடலின் நிறைவில் ️ ஒரு முறை
தொட்டு சொல்லுங்களேன்
மெல்லப் பேசும்
கள்ளப் பார்வை
ஜாதிப் பூவின் மென்மை..
சொல்லப் போகும்
பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை..
முள்ளில்லாத
தாழை போல
தோகை மேனி என்று..
அள்ளும் போது
மேலும் கீழும்
ஆடும் ஆசை உண்டு..
அந்த நேரம் நேரிலே
சொர்க்கம் தோன்றுமோ..
அந்த நேரம் நேரிலே
சொர்க்கம் தோன்றுமோ..
காணாததும்
கேளாததும்
காதலில் விளங்கிடுமோ..
பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும்
தேரில் வரும்
தேவன் மகன் நீயோ....
பொன் பட்டாடை
மூடிச் செல்லும்
தேன் சிட்டோடு மெல்ல..
நான் தொட்டாடும்
வேளை தோறும்
போதை என்ன சொல்ல..
கை தொட்டாட
காலம் நேரம்
போக போக உண்டு..
கண் பட்டாலும்
காதல் வேகம்
பாதி பாதி இன்று.
பள்ளிக்கூடம் போகலாம்
பக்கம் ஓடி வா..
பள்ளிக்கூடம் போகலாம்
பக்கம் ஓடி வா..
கூடம் தன்னில்
பாடம் பெறும்
காலங்கள் சுவையல்லவோ..
பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும்
தேரில் வரும்
தேவன் மகன் நீயோ..
பச்சைக்கிளி
முத்துச்சரம்
முல்லை கொடி யாரோ
பாவை என்னும்
தேரில் வரும்
தேவன் மகள் நீயோ......
ஹ ஹ ஹஹ..
ஹோ ஹோ ஹோஹோ..
லல் லல் லலல்ல லாலா....
ஹ ஹ ஹஹ..
ஹோ ஹோ ஹோஹோ..
லல் லல் லலல்ல லாலா....