menu-iconlogo
logo

Ore Jeevan Ondre Ullam

logo
Paroles
பெ : ஓ.... ஓ....ஓ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணா...ஓ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணே...ஓ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஒரே பூவில் ஒன்றே தென்றல்

வாராய் கண்ணே ... ஏ....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்

வாராய் கண்ணே...ஓ....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

பெ: அன்று கடல் மீது ஒரு

கண்ணன் துயில் மேவினான்

ஆ: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

பெ: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை

வாராய் கண்ணா...ஆ...

ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஆ: இங்கே விண் மீன்கள்

கண்ணாகி பார்க்கின்றன

பெ: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

ஆ: உந்தன் கண்மீன்கள்

என்மீது விளையாடட்டும்

பெ: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க

தேர் கொண்டு வா....

கண்ணன் வந்து கீதம்

சொன்னால், நான் ஆடுவேன்....

ஆ: ஒரே ஜீவன் ஒன்றே

உள்ளம் வாராய் கண்ணே ஓ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

பெ: அந்த மணிச்சங்கின்

ஒலிகேட்டு நான் ஆடுவேன்

ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

பெ: அந்த மணிச்சங்கின்

ஒலிகேட்டு நான் ஆடுவேன்

ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

பெ: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

ஆ: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம்

எந்தன் பக்கம், வேறில்லையே...

பெ: ஒரே ஜீவன் ஒன்றே

உள்ளம் வாராய் கண்ணா....