பெ: வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்..
துக்கத்திலே நீ இருந்தா..
கரைசேரும் காலம் எப்போ..
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன..
ஆ: கள்ள மனம் முள்ளு தச்சி..
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுதேன்
துக்கத்திலே.. நீ அழுத
கர சேரும் காலம் எப்போ..
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி..
ஆ: செங்கரும்பை நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பெ: பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு
ஆ: கள்ளையும் பாலா நீ நினைச்சே
முள்ளையும் பூவா நீ முடிச்சே
பெ: போனதெல்லாம் போகட்டுங்க
யாருமிங்கே ராமனில்லே
ஆ: வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்
ஆ: பக்கத்திலே நீ இருந்தா..
பெ: சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்
இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
பெ: கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஆ: ஜோடி வந்து.. சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா
பெ: சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
ஆ: என் குணத்தில் பைய வந்தால்
இன்னும் கொஞ்சம் தொல்லையடி
வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்
ஆ: பக்கத்திலே நீ இருந்தா
பெ: சொர்க்கத்திலே..ஏ.. நான் மிதப்பேன்
ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்