ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
பெண்: குடும்பக் கலை போதும்
என்று கூறடா கண்ணா அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா
குடும்பக் கலை போதும்
என்று கூறடா கண்ணா அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
ஆண்: காதல் சொன்ன பெண்ணை
இன்று காணமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள்
ஏனடா கண்ணா தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
பெண்: காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா அந்தக்
காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி
வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச்
சொன்னால் முடியுமா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
ஆண்: தினம் தினம் ஏன் கோபம்
கொண்டாள் கூறடா கண்ணா
தினம் தினம் ஏன் கோபம்
கொண்டாள் கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
பெண்: நினைப்பதெல்லாம் வெளியில்
சொல்ல முடியுமா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில்
சொல்ல முடியுமா கண்ணா அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
ஆண்: இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா
பெண்: அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
பெண்: குடும்பக் கலை போதும்
என்று கூறடா கண்ணா அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா
குடும்பக் கலை போதும்
என்று கூறடா கண்ணா அதில்