இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா 
ஆண் : ஓஒ ஓஒ ஓஒ 
எங்கிருந்தாய் நான் 
மண்ணில் பிறந்திடும் போது 
எங்கிருந்தாய் நான் 
கொஞ்சம் வளர்ந்திடும் போது 
ஆண் : எங்கேயோ பிறந்தாய் 
அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று 
என் முன்னால் நீயாய் வந்தாய் 
இதற்கென்ன அர்த்தம் 
என் உயிரெல்லாம் சத்தம் 
அடி எனக்காக நீயும் வந்தாய் 
ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ….. 
ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 
ஓஒ…..ஓஒ….ஓஒ….. 
ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 
ஆண் : எங்கிருந்தாய் நான் 
மண்ணில் பிறந்திடும் போது 
எங்கிருந்தாய் நான் 
கொஞ்சம் வளர்ந்திடும் போது 
ஆண் : ஓ… நிலவின்….. பின்புறமாய் 
நீ தான் இருந்தாயா 
குயிலின் குரல்வளையில் 
ஒளிந்தே இருந்தாயா……ஓ… 
ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய் 
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் 
இந்த உலகின் அழகெங்கும் 
நீ தானா வழிந்தோடினாய் 
ஆண் : எங்கிருந்தாய் நான் 
மண்ணில் பிறந்திடும் போது 
எங்கிருந்தாய் நான் 
கொஞ்சம் வளர்ந்திடும் போது 
ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் 
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன் 
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் 
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் 
ஒரு ஊசி முனை வழியே 
உயிரை நீ வெளியேற்றினாய் 
ஆண் : எங்கிருந்தாய் நான் 
மண்ணில் பிறந்திடும் போது 
எங்கிருந்தாய் நான் 
கொஞ்சம் வளர்ந்திடும் போது 
ஆண் : எங்கேயோ பிறந்தாய் 
அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று 
என் முன்னால் நீயாய் வந்தாய் 
இதற்கென்ன அர்த்தம் 
என் உயிரெல்லாம் சத்தம் 
அடி எனக்காக நீயும் வந்தாய் 
ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ….. 
ஓஒ…..ஹோ…..ஓஒ…….. 
ஓஒ…..ஓஒ….ஓஒ….. 
ஓஒ…..ஹோ…..ஓஒ…