இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி - 1988
Female Singing Track - 4Female - For Party Room
Male Voice: PVSings
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது...
(இசை)
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது...
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆஆஆ...
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது...
(இசை)
ஆ: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே...
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே...
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது...
(இசை)
ஆ: காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்...
பெ: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே.. என் நெஞ்சம் இனிக்கும்
ஆ: இனிய பருவமுள்ள இளங்குயிலே...
இனிய பருவமுள்ள இளங்குயிலே...
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
பெ: நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆ: ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
ஆ: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆஆஆ...
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது...
(இசை)
ஆ: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே...
பெ: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா...
ஆ: அழகைச் சுமந்து வரும் அழகரசி...
அழகைச் சுமந்து வரும் அழகரசி...
ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆ: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
ஆ: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது...
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆ...
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது...
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆஆஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது...
Brought to you by PVSings/PaadumVanambaadi