menu-iconlogo
logo

Sundhari Kannal Oru Sethi

logo
가사
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆ: நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஓ...ஓ...ஓ...ஓ...

ஓ...ஓ...ஓ...ஓ...

Overlap ஆ...ஆ...ஆ...ஆ....

ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...

பெ: வாய் மொழிந்த வார்த்தை

யாவும் காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா

ஆ: ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால்

கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால்

கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆ: வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆ: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆ: நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆ...ஆ...ஆ...ஆ...

Overlap ஓ...ஓ...

ஆ...ஆ...ஆ...ஆ..

ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

பெ: சோலையிலும் முட்கள்

தோன்றும் நானும் நீயும் நீங்கினால்

பாலையிலும் பூக்கள் பூக்கும்

நான் உன் மார்பில் தூங்கினால்

ஆ: ஆ...ஆ...மாதங்களும் வாரம்

ஆகும் நானும் நீயும் கூடினால்

வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெ: கோடி சுகம் வாராதோ

நீ எனை தீண்டினால்

ஆ: காயங்களும் ஆறாதோ

நீ எதிர் தோன்றினால்

பெ: உடனே வந்தால் உயிர் வாழும்

ஆ: வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆ: நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெ: என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக