காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. 
கண்ணீர் வழியுதடி கண்ணே.. 
காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. 
கண்ணீர் வழியுதடி கண்ணே.. 
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் 
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான் 
என்னானதோ ஏதானதோ சொல் சொல் 
காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. 
கண்ணீர் வழியுதடி கண்ணே.. 
 தென்றல் என்னை தீண்டினால் 
சேலை தீண்டும் ஞாபகம் 
சின்ன பூக்கள் பார்க்கையில் 
தேகம் பார்த்த ஞாபகம் 
வெள்ளி ஓடை பேசினால் 
சொன்ன வார்த்தை ஞாபகம் 
மேகம் ரெண்டு சேர்கையில் 
மோகம் கொண்ட ஞாபகம் 
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே 
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே 
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் 
காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. 
கண்ணீர் வழியுதடி கண்ணே.. 
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் 
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான் 
என்னானதோ ஏதானதோ சொல் சொல்