பாடியவர்கள் : ஏ எம் ராஜா பி சுசீலா
இசை : ஏ எம் ராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது...துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது..
பெண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது..துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது..
ஆண்: அல்லித்தண்டு போலவே
துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில்
புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ....
அல்லித்தண்டு போலவே
துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில்
புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ....
பெண்: புள்ளி போடும் தோகையை
வெள்ளி வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு போகலாகுமோ..நீயும்
கள்வனாக மாறலாகுமா....
பெண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது..துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது..
ஆண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது..துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது..
ஆண்:பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா....சிறு
மின்னலிடை பூவை தாங்குமா..
பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா....சிறு
மின்னலிடை பூவை தாங்குமா..
பெண்: மின்னலிடை வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்....அதில்
அந்தி பகல் பள்ளிக்கொள்ளுவேன்...
பெண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது..துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
ஆண்: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது..துணை
இங்கிருக்க யாரை எண்ணி பாடுது..