காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா..
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..
கண்ணீர் கடலில் குளிக்கவா..
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா..
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா..
இரு கை கொண்டு வணங்கவா..
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா..
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..
கண்ணீர் கடலில் குளிக்கவா...
முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா..
பரம்பரை நாணம் தோன்றுமா..
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி..
பேசமறந்து சிலையாய் இருந்தால்
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி..
அதுதான் காதல் சன்னதி..
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா..
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..
கண்ணீர் கடலில் குளிக்கவா..
ஆ..அ ஆ அ ஆ..
ஆ..அ ஆ அ ஆ..
ம்..ம் ம்ம் ம்ம்..
ம்..ம் ம்ம் ம்ம்..