menu-iconlogo
logo

Paalakkaattu Pakkathile

logo
Lyrics
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு

அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே குழந்தையை போல்

ஒரு அம்மாஞ்சி ராஜா

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு

அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே குழந்தையை போல்

ஒரு அம்மாஞ்சி ராஜா

யாரம்மா அது யாரம்மா

யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு

அப்பாவி ராணி

அவ சேலைக் கட்ட பாத்தா போதும்

அம்மாமி பாணி

யாரம்மா அது யாரம்மா

யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும்

பள்ளி அறையிலே

அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்

சாந்தி முகூர்த்தம்

சாந்தி என்றால் என்னவென்று

ராணியை கேட்டாராம்

ராணி தானும் அந்த கேள்வியையே

ராஜாவை கேட்டாளாம்

ஏனம்மா அது ஏனம்மா

ஏனம்மா அது ஏனம்மா

அவர் படித்த புத்தகத்தில்

சாந்தி இல்லையே

இந்த அனுபவத்தை சொல்லித் தர

பள்ளி இல்லையே

கவிதையிலும் கலைகளிலும்

பழக்கமில்லையே

அவர் காதலிக்க நேற்று வரை

ஒருத்தி இல்லையே

ஏனம்மா அது ஏனம்மா

ஏனம்மா அது ஏனம்மா

பூக்களிலே வண்டுறங்கும்

பொய்கையை கண்டாராம்

தேவி பூஜையிலே ஈஸ்வரனின்

பள்ளியை கண்டாராம்

மரக்கிளையில் அணில் இரண்டு

ஆடிடக் கண்டாராம்

ராஜா மனதுக்குள்ளே புதியதொரு

அனுபவம் கொண்டாராம்

ஏனம்மா அது ஏனம்மா

ஏனம்மா அது ஏனம்மா

பரமசிவன் சக்தியை

ஓர் பாதியில் வைத்தார்

அந்த பரமகுரு ரெண்டு பக்கம்

தேவியை வைத்தார்

பாற்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தார்

ராஜா பத்மநாபன் ராணியை தன்

நெஞ்சினில் வைத்தார்

யாரம்மா அது நானம்மா

யாரம்மா அது நானம்மா

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு

அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே குழந்தையை போல்

ஒரு அம்மாஞ்சி ராஜா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு

அப்பாவி ராணி

அவ சேலைக் கட்ட பாத்தா போதும்

அம்மாமி பாணி

யாரம்மா அது யாரம்மா

யாரம்மா அது யாரம்மா

Paalakkaattu Pakkathile by T.M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers