
ChandrodayamOru pennanadho
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை
இரு கண்ணானதோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை
இரு கண்ணானதோ
பொன்னோவியம்
என்று பேரானதோ
என் வாசல் வழியாக
வலம் வந்ததோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை
இரு கண்ணானதோ
குளிர் காற்று
கிள்ளாத
மலரல்லவோ
கிளி வந்து
கொத்தாத
கனியல்லவோ
குளிர் காற்று
கிள்ளாத
மலரல்லவோ
கிளி வந்து
கொத்தாத
கனியல்லவோ
நிழல் மேகம்
தழுவாத
நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த
பொருளல்லவோ
எந்நாளும்
பிரியாத
உறவல்லவோ
இளம் சூரியன்
உந்தன் வடிவானதோ
செவ்வானமே
உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை
உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ
இடம் தந்ததோ
இளம் சூரியன்
உந்தன் வடிவானதோ
செவ்வானமே
உந்தன் நிறமானதோ
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
முத்தாரம்
சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத்
தொடுகின்ற
நெருப்பல்லவோ
முத்தாரம்
சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத்
தொடுகின்ற
நெருப்பல்லவோ
சங்கீதம்
பொழிகின்ற
மொழியல்லவோ
சந்தோஷம்
வருகின்ற
வழியல்லவோ
என் கோயில்
குடி கொண்ட
சிலையல்லவோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை
இரு கண்ணானதோ
அலையோடு
பிறவாத
கடல் இல்லையே
நிழலோடு நடக்காத
உடல் இல்லையே
துடிக்காத
இமையோடு
விழியில்லையே
துணையோடு
சேராத
இனமில்லையே
என் மேனி
உனதன்றி
எனதில்லையே
எழிலோடு
எழில் சேர்த்து
இமை மூடவோ
எனக்கென்று
சுகம் வாங்க
துணை தேடவோ
மலர் மேனி
தனை கண்டு
மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற
தமிழ் மண்ணில்
விளையாடவோ
கண் ஜாடை
கவி சொல்ல
இசை பாடவோ
இளம் சூரியன்
உந்தன்
வடிவானதோ
செவ்வானமே
உந்தன்
நிறமானதோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை
இரு கண்ணானதோ
ஆ...
ChandrodayamOru pennanadho by T.M. Soundararajan/P.Susheela - Lyrics & Covers