இசையமைப்பாளர் திரு.S.A. ராஜ்குமார்
அவர்களுக்கு நன்றி
இந்த இனிய பாடலை பாடிய
திருமதி.மகாலட்சுமி அவர்களுக்கும்
திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி
பெண்: என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
பெண்: உன் ஆயுள் வரை தான்
வாழ்ந்திருப்பேன்
பெண்: உன் சுவாசத்திலே
நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான்
வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக
உன்னோடு நானாகவா...
ப்ரியமானவனே..ஹே ஹே ஹஹெய்
என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
ஆண்: மழை தேடி நான் நனைவேன்
சம்மதமா சம்மதமா
பெண்: குடையாக நான் வருவேன்
சம்மதமா சம்மதமா
ஆண்: விரல் பிடித்து நகம் கடிப்பேன்
சம்மதமா சம்மதமா
பெண்: நீ கடிக்க நகம் வளர்ப்பேன்
சம்மதமா சம்மதமா
ஆண்: விடிகாலை வேளை வரை
என்வசம் நீ சம்மதமா
பெண்: இடைவேளை வேண்டுமென்று
இடை கேக்கும் சம்மதமா
ஆண்: நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா
பெண்: என்னுயிரில் சரிபாதி
நான் தருவேன் சம்மதமா
ஆண்: என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
ஆண்: இமையாக நானிருப்பேன்
சம்மதமா சம்மதமா
பெண்: இமைக்காமல் பார்த்திருப்பேன்
சம்மதமா சம்மதமா
ஆண்: கனவாக நான் வருவேன்
சம்மதமா சம்மதமா
பெண்: கண்மூடி தவமிருப்பேன்
சம்மதமா சம்மதமா
ஆண்: ஹோ... ஒருகோடி ராத்திரிகள்
மடி தூங்க சம்மதமா
பெண்: பலகோடி பௌர்ணமிகள்
பார்த்திடுவேன் சம்மதமா
ஆண்: பிரியாத வரம் ஒன்றை
தரவேண்டும் சம்மதமா
பெண்: பிரிந்தாலும் உன்னை சேரும்
உயிர் வேண்டும் சம்மதமா
ஆண்: என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
ஆண்: உன் ஆயுள் வரை தான்
வாழ்ந்திருப்பேன்
ஆண்: உன் சுவாசத்திலே
நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான்
வாழ்ந்திருப்பேன்
பெண்: என்னோடு நீயாக
உன்னோடு நானாகவா
ஆண்: ப்ரியமானவளே... ஹே ஹே ஹஹெய்
பெண்: ப்ரியமானவனே.. ஹே ஹே ஹஹெய்
ஆண்: ப்ரியமானவளே.. ஹே ஹே ஹஹெய்
பெண்: ப்ரியமானவனே.. ஹே ஹே ஹஹெய்