பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்
இதயம் தன்னில்
ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : வண்ண வண்ண பூவெல்லாம்
வாசம் வீசி பூ பூக்கும்
உன்னை போல ஒன்றுக்கும்
வாசம் வீச தெரியாதே
ஆண் : கோடி கோடி வார்த்தைகள்
கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல்
அர்த்தம் எதிலும் கிடையாதே
ஆண் : ஓ ஓ …............
அழகே நீ வாய் பேச
கீதம் என்பேனே
சங்கீதம் என்பேனே
பேசாத மௌனத்தை
கவிதை என்பேனே
புது கவிதை என்பேனே
ஆண் : கடல் ஓரம் நீயும் வந்தால்
புயல் வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம்
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : உந்தன் கண்கள் ஓரத்தில்
தீட்டி வைத்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐந்நுாறு
காப்பியங்கள் உண்டாகும்
ஆண் : உந்தன் கூந்தல் ஈரத்தை
தொட்டு போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால்
எந்தன் வாழ்வில் வரமாகும்
ஆண் : ஓ ஓ….........
அன்பே உன் இதழை தான்
சிறைகள் என்பேனே
பனி சிறைகள் என்பேனே
ஆண் : மெலிதான இடையை தான்
பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
ஆண் : அடி அன்னபறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன்
ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்
இதயம் தன்னில்
ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்