ஆண் : தானா
வந்த சந்தனமே
உன்ன தழுவ
தினம் சம்மதமே
பெண் : தானா
வந்த சந்தனமே
உன்ன தழுவ
தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும்
பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும்
படிக்காத
மங்கள ராகமே
பெண் : இது வேறாரும்
பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத
மங்கள ராகமே
ஆண் : தானா
வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ
தினம் சம்மதமே
ஆண் : வண்ண வண்ண
வளவி போட்டு
வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி
இழுத்து போகும் இளந்தேகமே
பெண் : கூறைபட்டு
கலங்கிடாமே
குறை ஏதும்
நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும்
மகராசனே
ஆண் : முன்ன பின்ன
அறிஞ்சதில்ல
முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும்
பொறுத்தாக வேணுமே
பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல
புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக
வெளியாக்க வேணுமே
ஆண் : இந்த மேனி
இன்பத் தோணி
பெண் : ராணி
இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே
ஆண் : தானா
வந்த சந்தனமே
உன்ன தழுவ
தினம் சம்மதமே
பெண் : இது வேறாரும்
பறிக்காத
மல்லிக தோட்டமே
ஆண் : யாராலும்
படிக்காத
மங்கள ராகமே
பெண் : தானா
வந்த சந்தனமே
ஆண் : உன்ன தழுவ
தினம் சம்மதமே
பெண் : முத்துநவ
ரத்தினத்தோட
முழுசான
லட்சணத்தோட
மெத்தையில
நானும் கூட வர வேணுமே
ஆண் : முன்னம் ரெண்டு
பவளத்தோட
முன்வாயில்
மதுரத்தோட
கண்ணனுக்கு
காதல் விருந்து தர வேணுமே
பெண் : தொட்டுத் தொட்டு
சுகமும் கூட
சுதியோடு
கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட
முடியாம போகுமே
ஆண் : கொத்துமல்லி
கொண்டையிலாட
குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட
புது தாகம் தோணுமே
பெண் : நல்ல ராசா
சொல்லு லேசா
ஆண் : ராசா
இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே
பெண் : தானா
வந்த சந்தனமே
உன்ன தழுவ
தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும்
பறிக்காத
மல்லிக தோட்டமே
பெண் : யாராலும் படிக்காத
மங்கள ராகமே
ஆண் : தானா
வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ
தினம் சம்மதமே
by FAIZALAHED1