menu-iconlogo
logo

Thirumurugan Aruginile Valli Kurathi

logo
Paroles
ஆ: ஆஹா......ஆ

பெ: அஹா......ஆ..

ஆ: ஓஹோ .......ஓ..

பெ: லாலா...லா லா..

ஆ: திருமுருகன் அருகினிலே

வள்ளிக்குறத்தி

திருமுருகன்.. அருகினிலே

வள்ளிக்குறத்தி

பெ: நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்

வாரேன் கண்ணாளா

பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்

வாரேன் கண்ணாளா..

வாரேன் கண்ணாளா

எதிர்ப் பார்த்தேன் இந்நாளா

வாரேன் கண்ணாளா..

எதிர்ப் பார்த்தேன் இந்நாளா

திருமுருகன் அருகினிலே

வள்ளிக் குறத்தி..

திருமுருகன் அருகினிலே

வள்ளிக் குறத்தி..

ஆ: வைகாசி மாசம் பொறந்து

கைவீசி மாலை அணிந்து

ஊர்கோலம் நாம் போகலா..ம்

ஊர்கோலம் நா..ம் போகலா..ம்

பெ: வளைக்கரம் மெல்ல தொட்டு

வாயாடும்போது

ஆனந்த லீலை.. ஆரம்ப வே..ளை

அதுதானே

ஆனந்த லீ..லை ஆரம்ப வே..ளை

அதுதானே

ஆ: மயக்கம் பிறக்கும் தன்னாலே

பெ: மருவியணைக்கும் முன்னாலே

ஆ: மயக்கம் பிறக்கும் தன்னா..லே

பெ: மருவியணைக்கும் முன்னாலே

ஆ: திருமுருகன் அருகினிலே

வள்ளிக்குறத்தி

திருமுருகன் அருகினிலே

வள்ளிக்குறத்தி

படம் : மேயர் மீனாட்சி

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் வாணிஜெயராம்

இசை: எம்.எஸ்.வி

இனிய இப்பாடலை வடிவில் விலை கொடுத்து

தயாரித்து வழங்குவது

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: மீனாளின் கோவில் நமக்கு

வாழ்நாளில் காவல் இருக்கு

தேனாற்றில் நீராடலாம்..

தேனாற்றில் நீராடலாம்

ஆ: இனித்திடும் வெல்லக்கட்டி

நீயாகும்போது

நானாட வேறு..

தேனாறு ஏது தெரியாது..

நானாட வேறு

தேனாறு ஏது தெரியாது

பெ: விடியும் வரையில் நீராடு

ஆ: முடியும் வரையில் போராடு

பெ: விடியும் வரையில் நீரா..டு

ஆ: முடியும் வரையில் போராடு

பெ: திருமுருகன் அருகினிலே

வள்ளிக்குறத்தி

திருமுருகன்.. அருகினிலே

வள்ளிக்குறத்தி

இனிய இப்பாடலை வடிவில் விலை கொடுத்து

தயாரித்து வழங்குவது

ஆ: முந்தானை மூடி மறைத்து

முந்நூறு முத்தமளந்து

போதாமல் போராடுவேன்..

பெ: அடிக்கடி சத்தம் வந்தால்

ஆகாது கண்ணா

நாணங்கள் வந்து.. நான் கொண்ட

பெண்மை தவிக்காதோ

ஆ: தடுத்து நிறுத்தக் கூடாது

பெ: எடுத்துக் கொடுத்து மாளாது

ஆ: தடுத்து நிறுத்தக் கூடாது

பெ: எடுத்துக் கொடுத்து மாளாது

ஆ: திருமுருகன் அருகினிலே

வள்ளிக்குறத்தி

பெ: நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்

வாரேன் கண்ணாளா..

வாரேன் கண்ணாளா

எதிர்ப் பார்த்தேன் இந்நாளா

இரு: ஆஹா ஆஹா ஆ

ஓஹோ ஓஹோ ஓ

ம் ஹு ஹு ஹும்

ம் ஹு ஹு ஹும்

Thirumurugan Aruginile Valli Kurathi par P. Jayachandran/vanijayaram - Paroles et Couvertures