ஆ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு
சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
தானன தனனானா.... நா
தானன தனனானா...
பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
பெ: கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
ஆ: தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
பெ: ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
ஆ: செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு
சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
கோரஸ்: ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ
ஆ: நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
பெ: இருவரும் அன்றாடம்
சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆ: நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து
பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆ: கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
பெ: கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...