திருத்தே ரில் வரும் சிலையோ
சிலைப்பூ ஜை
ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நில வொளியோ எனும் சுகம் தரும்
திருத்தே ரில் வரும் சிலையோ
மணமே டை வரும் கிளியோ
கிளி தே டுவது
கனியோ கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக் கணையோ தரும் சுகம் சுகம்
மணமே டை வரும் கிளியோ
தாலாட்டு கேட் கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆ டுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன்மழை தூ வுது
ராகங்களில் மோ ஹனம்
மேகங்களின் நா டகம்
உன் கண்கள் எழுதிய கா வியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமே டை வரும் கிளியோ
கிளி தே டுவது
கனியோ கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக் கணையோ தரும் சுகம் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பா டுது
சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பே சுது
தீபம் தரும் கா ர்த்திகை
தேவன் வரும் மா ர்கழி
என் தெய்வம் அனுப்பிய தூ துவன்
நான் தினமும் பாத்திருக்கும் திருக்கோலம்
திருத்தே ரில் வரும் சிலையோ
சிலைப்பூ ஜை
ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நில வொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ