கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா உன்
கடைக் கண்ணால் நலம்
கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி
வந்தோம் அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன்
அடைந்தோம் அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் அம்மா
அம்மா எங்களுக் கருள் வந்தாய்
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் அம்மா
அம்மா எங்களுக் கருள் வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா