ஆண் : ஊ ............ஊ ..............ஊ ..................
ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஆ ஆஆ ..........
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே
ஆண் : உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும்
காதல் கொள்ள வாராயோ
ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீ மதுமிதா
இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : செங்குயிலே…..யே ……....
சிறு வெயிலே…... (சிறு வெயிலே.)
மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென
செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
உன்னிலுள்ள வளம் என்னதென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே
ஆண் : நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே........... (செங்குயிலே
சிறு வெயிலே….....யே…....
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே……
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீ மதுமிதா
இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பெண் : இனியவனே …....யே ……...
இணையவனே …...யே ……...
உன்னைக் காணவில்லை என்னும்போது
நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்
ஹோய் பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று
பற்கள் தலையணையைக் கடிக்கும்
பெண் : உனைத் தொட்டுப் பார்க்க
மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே ..…யே ……...
என்னவனே ...…யே …..…..
மூக்குமீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாடா.........
பெண் : என்னை கொண்டாட பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் நுழைந்தவனே
உயிரை கண்கொண்டு கடைந்தவனே
பெண் : உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ ….
அன்பே….யே …….ஹே