பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து
நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
ஆண் : கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்க தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
ஆண் : துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா..........
ஆண் : ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து
துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
ஆண் : இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
ஆண் : தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஆண் : ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே