menu-iconlogo
logo

Naan Thedum Sevanthi

logo
Paroles

நான் தேடும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ

பருவ குயில் தவிக்கிறதே ஹே ஹே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கிறதே

பொன்மானே என் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

ஆ ஆ

மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலை வருமோ

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தல்லாடும் பொன் மேகம் நான்

எந்நாளும் உன் வானம் நான்

என் தேவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்

என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

ஆ ஆ ஆ ஆ பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

ஆ ஆ

Naan Thedum Sevanthi par ilaiyaraaja - Paroles et Couvertures