M: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்……
எல்லாமே என் சொந்தம்…..
இதயம் முழுதும் எனது வசம்
F: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
M: நீலம் கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் போட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
F: காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
M: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
F: நீயின்றி ஏது பூவைத்த மானே
M: இதயம் முழுதும் எனது வசம்
F: வா வா அன்பே அன்பே
M: காதல் நெஞ்சே நெஞ்சே
F: கண்ணன் வந்து துஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
M: காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
F: உன் தோளில் தானே பூமாலை நானே
M: சூடாமல் போனால் வாடாதோமானே
F: இதயம் முழுதும் எனது வசம்
M: வா வா அன்பே அன்பே
F: காதல் நெஞ்சே நெஞ்சே
M: உன் வண்ணம் உன் எண்ணம்
F: எல்லாமே என் சொந்தம்
M: இதயம் முழுதும் எனது வசம்
F: வா வா அன்பே அன்பே
M: காதல் நெஞ்சே நெஞ்சே