Song : Aandavan Yaaraiyum
Movie/Album Name : Koil Maniyosai
Singer : K. J. Jesudass
Music Composed by : Gangai Amaran
Lyrics written by : Pattukottai Nadarajan
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல
வேலியத்தான் போட்டு வப்பான்
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்
வேலியையும் தாண்டிப்புட்டா
வேதனையில் சிக்க வப்பான்
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல
பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு
கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு
சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து
வந்தத கொண்டுதான் போனதே காத்து
எண்ணி எண்ணி பாத்து பாத்து
ஏங்கி போகும்போது……..
இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
அட சோதனை கொஞ்சமில்ல
ஆரி ஆரிரோ ஆரிரோ..
ஆரிராரி ஆரிரோ ஆரிரோ.
புள்ளி வச்சு கோலந்தான் போட்டது அந்த சாமி
கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி
எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு
பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு
பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும்
காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
அட ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல
வேலியத்தான் போட்டு வப்பான்
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்
வேலியையும் தாண்டிப்புட்டா
வேதனையில் சிக்க வப்பான்
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல.
Thank u all
AGRICHANDRAN-ISL