menu-iconlogo
logo

Andavan Yaaraiyum /ஆண்டவன் யாரையும் by AGRICHANDRAN-ISL

logo
Paroles
Song : Aandavan Yaaraiyum

Movie/Album Name : Koil Maniyosai

Singer : K. J. Jesudass

Music Composed by : Gangai Amaran

Lyrics written by : Pattukottai Nadarajan

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

வேலியத்தான் போட்டு வப்பான்

வேடிக்கத்தான் பாத்து நிப்பான்

வேலியையும் தாண்டிப்புட்டா

வேதனையில் சிக்க வப்பான்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு

கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு

சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து

வந்தத கொண்டுதான் போனதே காத்து

எண்ணி எண்ணி பாத்து பாத்து

ஏங்கி போகும்போது……..

இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

அட சோதனை கொஞ்சமில்ல

ஆரி ஆரிரோ ஆரிரோ..

ஆரிராரி ஆரிரோ ஆரிரோ.

புள்ளி வச்சு கோலந்தான் போட்டது அந்த சாமி

கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி

எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு

பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு

பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும்

காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

அட ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

வேலியத்தான் போட்டு வப்பான்

வேடிக்கத்தான் பாத்து நிப்பான்

வேலியையும் தாண்டிப்புட்டா

வேதனையில் சிக்க வப்பான்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல.

Thank u all

AGRICHANDRAN-ISL