ஆண் :நீலநிறம் வானுக்கும்
கடலுக்கும் நீலநிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்
காரணம் ஏன் கண்ணே உன்கண்ணோ
நீலநிறம் ம்ம்ம்ம்…..
ஆண் : தாமரை பூவிலே
உந்தன் இதழ்கள்
தந்ததென்ன சிவப்போ
பெண் : மீன்களின் அழகையே
எந்தன் விழிகள் தந்ததாய்
நினைவோ
ஆண் : தாமரை பூவிலே
உந்தன் இதழ்கள்
தந்ததென்ன சிவப்போ
பெண் : மீன்களின் அழகையே
எந்தன் விழிகள் தந்ததாய்
நினைவோ
ஆண் : அந்த முகில் உந்தன்
கருங்கூந்தல் விளையாட்டோ
பெண் : உங்கள் கவிதைக்கு
எந்தன் மேனி விளையாட்டோ
ஆண் : நீல நிறம்
பெண் : ஆஹா ...ஆ
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம் பெண் : ஆஹா...
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம் ம்ம்ம்ம் …..
ஆண் : இலைகளும் கனிகளும்
உன் இடையில் வந்ததோர் அழகோ
பெண் : இயற்கையின் பசுமையே
எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
ஆண் : இலைகளும் கனிகளும்
உன் இடையில் வந்ததோர் அழகோ
பெண் : இயற்கையின் பசுமையே
எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
ஆண் : அந்த நதி என்ன
உன்னை கேட்டு நடைபோட்டதோ
பெண் : இங்கு அதை பார்த்து
உன் நெஞ்சம்இசை போட்டதோ
பெண் : நீல நிறம்
ஆண் : ஆஹா...ஆ..
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
என் கண்ணோ
நீல நிறம் ம்ம்ம்ம் ….
ஆண் : கோவிலின் சிலைகளே
உன் கோலம் பார்த்த
பின் படைப்போ
பெண் : கோபுர கலசமே என்
உருவில் வந்ததாய் நினைப்போ
ஆண் : கோவிலின் சிலைகளே
உன் கோலம் பார்த்த
பின் படைப்போ
பெண் : கோபுர கலசமே என்
உருவில் வந்ததாய் நினைப்போ
ஆண் : இது தடை இன்றி
விளையாடும் உறவல்லவா
பெண் : அதில் தமிழ் கூறும்
உவமைகள் சுவையல்லவா
ஆண் : நீல நிறம்
பெண் : ஆஹா...ஆ
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம் ம்ம்ம்ம்…..