நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனை பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில்
விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என்
ஆயுள் நீளுமடி…!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை
நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி…!